கடலூர் திட்டக்குடியில், தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தூக்கில் தொடங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் எனப்வர் தனது வீட்டின் நிறத்தை சி.எஸ்.கே.வின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர். தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததார்.
இந்நிலையில் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கனவம் ஈர்த்த கோபிகிருஷ்ணன் நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“