சட்ட விரோத பேனர் வழக்கு.. அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை!

அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது

அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேனர் வழக்கு

பேனர் வழக்கு

சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்றம், பேனர்கள் வைக்க தடை விதித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டுன் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது..

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற கால அவகாசம் கேட்டால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்..

Advertisment
Advertisements

சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்..

அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

மேலும், நாளை அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: