Advertisment

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அ.ம.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் அ.ம.மு.க பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dindigul Nursing college correspondent Jothi Murugan sentenced 7 years prison in sexual assault case Tamil News

கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Dindugal: திண்டுக்கல் - பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியில் பயிலும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தனர். 

Advertisment

இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் அ.ம.மு.க பிரமுகரும், கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 25,000  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dindugal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment