Advertisment

திண்டுக்கல் கோழிப் பண்ணையில் தீ விபத்து: 2500 கோழிகள் கருகிய சோகம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 2500 கோழிக் குஞ்சுகள் தீயில் எரிந்து கருகின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dindigul poultry farm fire

Dindigul poultry farm fire

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்- பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர் கோழிப் பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் சுமார் 7 செட்டுக்கள் அமைத்து ஒவ்வொரு செட்டுக்களிலும் 2500 கோழிக் குஞ்சுகள் வளர்த்து வருகிறார்.

Advertisment

பிறந்த கோழிக் குஞ்சுகள் வெளி சூழலில் வளர்வதற்கு ஏதுவாக 15 நாட்களுக்கு மண் சட்டியில் அடுப்பு கரி வைத்து அனல் உண்டாக்கி குஞ்சுகள் மிதமான வெப்பத்தில் இருக்கும் படி செய்வது வழக்கம். இந்நிலையில் அதேபோல் நேற்றும் செய்துள்ளனர்.

publive-image

அப்போது கரிக்கட்டையில் இருந்து வந்த தீ பிழம்புகள் கீழே இருந்த தென்னமஞ்சியில் பட்டு மல மளவான தீ பிடிக்கத் தொடங்கியது. இதில் ஒரு கோழி செட்டில் இருந்த 2500 குஞ்சுகளும் தீ எரிந்து கருகிப் போயின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கோழிப் பண்ணை செட் மற்றும் கோழி குஞ்சுகள் என சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dindugal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment