/tamil-ie/media/media_files/uploads/2022/11/Dindigul-seenivasan.jpg)
முன்னாள் அமைச்சரும் அதி்முக மூத்தத் தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனி்வாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அதி்முக மூத்தத் தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏற்கனவே உடல் நலக் குறைவு இருந்து வந்தது. முன்னதாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வரும் திங்கள்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் இன்று வீடு திரும்பிவிட்டார்.
திண்டுக்கல் சீனிவாசன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார்.
ஒ.பன்னீர் செல்வத்துக்கு பிறகு அவர் வகித்துவந்த பொருளாளர் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.