சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தங்க கவசத்தை அதிமுக கழகபொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் கோவில் அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழா அக்.28ஆம் தேதி முதல் அக்.30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்தத் தங்க கவசம் விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக கழக பொருளாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் குரு பூஜை விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாளிடம் ஒப்படைத்தார்.
தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்ததும் அந்த தங்க கவசத்தை மீண்டும் இதே வங்கியில் லாக்கரில் வைக்கப்படும். இந்தத் தங்க கவசம் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கியதாகும்.
தேவர் நினைவிடத்தில் குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வெறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அக்.30ஆம் தேதி மரியாதை செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“