சென்னை ஐகோர்ட் நீதிபதி குறித்து அவதூறு பதிவு: திண்டுக்கல் த.வெ.க நிர்வாகி கைது

கரூர் தவெக கூட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, நீதிபதி செந்தில் குமார் கட்சியின் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். நீதிபதியைக் குறித்து இழிவாகப் பதிவிட்ட திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார்.

கரூர் தவெக கூட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, நீதிபதி செந்தில் குமார் கட்சியின் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். நீதிபதியைக் குறித்து இழிவாகப் பதிவிட்ட திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
tvk nirmalkumar

தவெக தலைவர் விஜயின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் குறித்து சமூக வலைதளங்களில் நீதிபதியை பற்றி இழிவாகப் பதிவிட்டதாக, த.வெ.கவின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தலைவர் விஜயை பார்ப்பதற்காக  திரண்டிருந்த மக்களிடையே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்குத் தகுந்த நெறிமுறைகளை வகுக்கக் கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, அக்டோபர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செந்தில் குமார், கரூர் சம்பவத்தை ஒரு "மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு " எனக் குறிப்பிட்டு, தவெகவை மிகக் கடுமையாகச் சாடினார். "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். இந்த விவகாரத்தில் அரசு அமைதியாக இருக்கக் கூடாது. என்ன மாதிரியான கட்சி இது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் தவெக கட்சிக்கு என்ன தடை இருந்தது? ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்கள், ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவப் பண்பே இல்லை" இவ்வாறு நீதிபதி செந்தில் குமார் தவெக பற்றி விமர்சித்திருந்தார்.
 
நீதிபதியின் இந்தக் காட்டமான கருத்துகளுக்குப் பிறகு, தவெகவின் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். அவ்வகையில், தவெகவின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல் குமார், நீதிபதிக் குறித்து அவதூறான கருத்துகளைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல்துறையினர் நிர்மல் குமாரை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

Vijay TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: