தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி படக்குழுவினரை செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் தவறாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபாநாயகர் அப்பாவு, டி.ஐ.பி.ஆர் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி (பத்திரிகை வெளியீடு) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஜன.6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது டிடி தமிழ் பத்திரிகையாளர் கௌதம் மற்றும் வீடியோ பத்திரிகையாளர் சுரேந்தர் ஆகியோர் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறிய முருகன், டிஐபிஆர் அதிகாரிகளின் வரம்பு மீறிய செயல் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“