'சீதையும் நானும் உடன் பிறந்தவர்கள் போல'.. இயக்குனர் அமீர் குமுறல்

இராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல என இயக்குனர் அமீர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். அக்னியில் இறங்கி சீதை தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தார் என்றார்.

இராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல என இயக்குனர் அமீர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். அக்னியில் இறங்கி சீதை தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தார் என்றார்.

author-image
WebDesk
New Update
Amir (1)

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அமீர் தனது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருள்கள் சிக்கியது.
இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ஜாஃபர் சாதிக்கை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் இயக்குனரும் ஜாஃபர் சாதிக் நண்பருமான இயக்குனர் அமீரிடம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து பேசிய அமீர், “இராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல; அவர் அக்னியில் இறங்கி தன்னை நிரூபித்தார். நான் வாரந்தோறும் என்னை நிரூபித்து வருகிறேன்” என்றார்.

மேலும் போதைப் பொருள் என்பது நான் வெறுக்கின்ற குற்றம்; அந்த வழக்கில் என் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லி வருகிறேன்” என்றார் மனக்குமுறலுடன்.

Advertisment
Advertisements

ஜாஃபர் சாதிக் தொடர்பான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் விசாரணை நடத்த சமீபத்தில் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அமீர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Jaffer Sadiq

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: