கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது? கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
College

Tamilnadu

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றன. அதேபோல், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் 21 வரை காலையில் நடத்தப்பட்டன. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் 21 வரை மதியம் தேர்வுகள் நடைபெற்றன.

Advertisment

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

அதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: