/tamil-ie/media/media_files/uploads/2017/08/kovai-collector-office.jpg)
கேரளாவிலிருந்து மின்னனு, மருத்துவ கழிவுகள் கோவை மாவட்டம் மதுக்கரையில கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ, பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், மற்றும் ரசாயன கழிவுகள் போன்ற கழிவுகளை கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் வேலுமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அப்துல் அலி கொட்டப்படுவதாக கூறியுள்ளார். அனுமதி எதுவும் இல்லாமல் அப்பகுதியில் இது போன்ற குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சுற்று சூழல் பாதிப்படைவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே மதுக்கரை வட்டாச்சியரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளிக்கபட்டுள்ளது. அதன்படி வட்டாச்சியர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி அன்று அந்த கழிவுகளை அகற்றவும், மேற்கொண்டு கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டார். ஆனால் அந்த கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். மேலும் வருங்காலத்தில் இது போன்று அண்டை மாநிலத்திலிருந்து கழிவுகளை கொட்ட அனுமதிக்கக்கூடாது. மேலும் ஏற்கனவே வாட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேணடும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மனுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை நாளை தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.