சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த மாநாடு, மார்ச் 6ல் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம், 7ம் தேதி காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.