Advertisment

'இன்பங்கள் மலரும் தீப ஒளியாக அமையட்டும்': அரசியல் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

'நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.' என்று எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Diwali 2023 wishes by politicians and celebrities in tamil

'வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Diwali: தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால், பண்டிகை கொண்டாட்டம் இப்போது நாடு முழுதும் களைகட்டத் தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை வரவேற்கத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

இந்நிலையில், தமிழக எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- 

மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும்.

மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

 ராமதாஸ் வாழ்த்து 

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பது பின்வருமாறு:- 

வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும்.

அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீப ஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி. தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடின்றி தாராளமாக நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாட வேண்டிய உழவர்களின் மனங்கள், வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் துவண்டு கிடக்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் சமூக நீதி செயல்பாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வேகம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் சறுக்கிக் கொண்ட சமூகநீதியை சரி செய்வதற்கு கூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை.

மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்று அவர் தெரிவித்துள்ளார். 

டி.டி.வி தினகரன் வாழ்த்து. 

இந்நிலையில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது பின்வருமாறு:- 

தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளி பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் இந்த தீபாவளி திருநாள் அமைய, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தீபாவளி வாழ்த்து 

தீபத்‌ திருநாளாம்‌ தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும்‌, உற்சாகத்துடனும்‌ கொண்டாடும்‌ இந்நன்னாளில்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ எனது இதயம்‌ கனிந்த தித்திக்கும்‌ தீபாவளி திருநாள்‌ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்வதாக சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தெரிவித்து இருப்பது பின்வருமாறு:- 

நரகாசுரன்‌ எனும்‌ கொடிய அரக்கன்‌ தனது கொடுஞ்செயல்களால்‌ மக்களையும்‌, தேவர்களையும்‌ பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான்‌. அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன்‌ இருமால்‌ அழித்த தினமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்தத்‌ திருநாள்‌ இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும்‌ இனமாகவும்‌, சூழ்ச்சிகளும்‌, இமைகளும்‌ நம்மை விட்டு அகன்று நன்மைகள்‌ பெருகும்‌ நாளாகவும்‌ விளங்கும், இந்த மங்களகரமான நாளில்‌ அனைத்து மக்களும்‌, தங்களின்‌ இல்லங்களை அலங்கரித்தும்‌ தீபங்களை ஏற்றி வைத்தும்‌, புத்தாடைகளை அணிந்தும்‌, உற்றார்‌ உறவினர்களுக்கு பரிசளித்தும்‌, பட்டாசுகளை வெடித்தும்‌,  இனிப்புகளை பகிர்ந்து உண்டும்‌, உற்சாகத்துடனும்‌, குதூகலத்துடனும்‌ தீபாவளி திருநாளைக்‌ கொண்டாடி மகிழ்கிறார்கள்‌.  

இந்த இனிய திருநாளில்‌, நாடெங்கும்‌ அன்பும்‌ அமைதியும்‌ தழைக்கட்டும்‌, வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்‌, அனைவரது வாழ்விலும்‌ வளமும்‌, நலமும்‌ பெருகட்டும்‌ என்று எல்லாம்‌ வல்ல ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும்‌ மீண்டும்‌ ஒரு முறை எனது இனிய தீபாவளி திருநாள்‌ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment