Advertisment

தீபாவளி மது விற்பனை.. ரூ. 350 கோடி விற்பனை நிர்ணயமா?

மதுபான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபாவளி மது விற்பனை

தீபாவளி மது விற்பனை

தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு மதுபான கடைகளில் ரூ.350 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்தும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு ரூ.350 கோடி மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மதுபான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் நலன் மீது அக்கறையின்றி மது விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மதுவுக்கு எதிரான தீவிரப் போராட்டம் காரணமாக 20 சதவிகிதம் தீபாவளி விற்பனை குறைந்து, ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நம்பப்படுகிறது

Tamilnadu Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment