Advertisment

தீபாவளி: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.

author-image
WebDesk
New Update
Indian Railways Public WiFi Network

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் உள்ள மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.  இதனால் பேருந்து நிலையங்கள். ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. 

Advertisment

கோவை மாவட்டத்திலும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. 

பயணிகளின் பாதுகாப்புக் கருதியும்அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் ரயிலில் பட்டாசு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் யாரேனும் பட்டாசுகளை எடுத்து செல்கிறார்களா என ரயில்வே போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனிடையே கோவை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் பட்டாசு கொண்டு வந்ததாக தெரிந்த நிலையில் அவரை வெளியேற்றியுள்ளனர். ரயில்வே துறை ஆய்வாளர் கிரீஸ் தலைமையில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற செயல்களை கண்டறிவதற்கும் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் ரயில்வே போலீசார் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment