/indian-express-tamil/media/media_files/2024/11/01/bC8fYEUnV32yxj8WtHNc.jpg)
நரகாசுரன் தமிழரின் முன்னோர் எனவும் அவரது இறப்பை கொண்டாடுவது முறையல்ல அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பெரியாரிய அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர். நரகாசுரனை முருகர்/ கிருஷ்ணர் வதம் செய்த நாளாக தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நரகாசுரன் தமிழரின் முன்னோர் எனவும் அவரது இறப்பை கொண்டாடுவது முறையல்ல அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பெரியாரிய அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஆரியர்கள் பல்வேறு இதிகாச கதைகளில் நம்முடைய முன்னோர்களை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் குறிப்பிடும் பெரியாரிய சிந்தனையாளர்கள் தீபாவளியை புறக்கணிப்பர். மேலும் இந்நாளில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியையும் மேற்கொள்வர்.
அதன்படி இன்றைய தினம் கோவையில் பெரியார் படிப்பகத்தில் நரகாசுரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என்ற முழக்கங்களையும் தீபாவளியை புறக்கணிப்போம் என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டு இறைச்சி பிரியாணி மற்றும் பன்றி கறி உணவும் வழங்கப்பட்டது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.