தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்.31-ம் தேதி வருகிறது. மக்கள் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஏதுவாக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அக்.19-ல் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். ஆலோசனைக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது அதில் சென்னையில் இருந்து மட்டும் 10,500 பேருந்துகள் இயக்கவும் திட்டம் உள்ளது. 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“