/tamil-ie/media/media_files/uploads/2018/10/dmdk-leader-vijayakanth-admitted-in-hospital.jpg)
2019 Lok Sabha election
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை அடுத்து அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை அரசியல் பணிகளை கவனிக்கும் அளவிற்கு தேர்ச்சி பெறாத காரணத்தால், அனைத்து கட்சி பொறுப்புகளையும் அவருடைய மனைவி பிரேமலதா எடுத்து கவனித்து வருகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி :
சுமார் 20 நாட்களுக்கு முன்பே அமெரிக்காவில் சிகிச்சை முடித்து நாடு திரும்பிய அவருக்கும் மீண்டும் உடல்நலம் பாதிப்படைந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தேமுதிக வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். மேலும் சாதாரண பரிசோதனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிகவினர் கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.