New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Vijayakanth-1.jpg)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றிபெற, தே.மு.தி.க-வினர் கடினமாக உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
DMDK Party Leader Vijayakanth: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் குரலை கேட்க, ஆவலுடன் காத்திருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பரப்புரை மேற்கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றிபெற, தே.மு.தி.க-வினர் கடினமாக உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, மருத்துவர்களின் அறிவுரைப்படி பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ள விஜயகாந்த், தர்மம் வெல்லும், அதர்மம் தோற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #நாடாளுமன்றதேர்தல் |#நாளைநமதே | #நாற்பதும்நமதே pic.twitter.com/QgDMCnFv0m
— Vijayakant (@iVijayakant) April 8, 2019
இந்த வீடியோ தற்போது தே.மு.தி.க-வினர் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.