/tamil-ie/media/media_files/uploads/2023/02/EVM.jpg)
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெரிய அளவிலான விதிமீறல்கள் ஏற்படுவதாக கூறி தேர்தலை ரத்து செய்ய மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) சத்யபிரதா சாஹூவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, திமுதிக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சாஹூவிடம் மனு கொடுத்துள்ளோம்.
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுதிக கடந்த காலங்களில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை", என்று ஜனார்த்தனன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.