/indian-express-tamil/media/media_files/XoNbbD85FwQ61foX61Jr.jpg)
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியிட்டுப்பட்டு வருகிறது.
Dmk | Cpim | Cpi | Lok Sabha Election:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பரபரப்பாக ஈடுப்பட்டுள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்,நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியிட்டுப்பட்டு வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது திண்டுக்கல், மதுரையில் போட்டியிடுகிறது.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கடந்த 2019 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட, நாகை, திருப்பூர் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது குறிபிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.