Advertisment

ஜெயலலிதா குற்றவாளி - தி.மு.க… முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை - அ.தி.மு.க; தஞ்சையில் வெடித்த பூகம்பம்

ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தி.மு.க மேயர்; முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை என அதிர வைத்த அ.தி.மு.க - தஞ்சையில் வெடித்த பூகம்பம்

author-image
WebDesk
New Update
ஜெயலலிதா குற்றவாளி - தி.மு.க… முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை - அ.தி.மு.க; தஞ்சையில் வெடித்த பூகம்பம்

ஜெயலலிதா என ஒருமையில் தஞ்சை மேயர் பேசிய நிலையில், கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷனும், முதல்வர் மீது பாலியல் வழக்கு இருப்பதாகவும் கூறி அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க- அ.தி.மு.க.,வினருக்கு இடையே  ஏற்பட்ட காரசார விவாதத்தால் தஞ்சை மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

Advertisment

தஞ்சை மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

publive-image

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திருப்பி கொடுத்து உள்ளார்கள் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மேயர் சண்.ராமநாதன், அதற்கு பதில் சொல்லாமல் ஜெயலலிதா ஏ1 குற்றவாளி தண்டனை பெற்றவர் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க உறுப்பினர்கள் மறைந்த முதல்வர் கருணாநிதி மீது ஊழல் குறித்து சர்க்காரியா கமிஷன் விசாரணை நடத்தியது என்றும், தற்போதைய முதல்வர் மீது பாலியல் வழக்கு இருந்ததாகவும் கூறினர். இதனால் அ.தி.மு.க- திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

publive-image

இந்த நிலையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி பாலியல் வழக்கு உள்ளது என்று தவறான தகவலை கூறக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

விபரீதத்தை புரிந்து கொண்ட மேயர் சண்.ராமநாதன் திடீரென எழுந்து மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால், மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

publive-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒருமையில் பேசிய மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தஞ்சையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அ.தி.மு.க,  உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Thanjavur Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment