/indian-express-tamil/media/media_files/Rqld8sHT0cVyShYLYzLo.jpg)
2 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
தி.மு.க-வில் சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அந்த பதவிக்கு புதிய நிர்வார்களை நியமித்து தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
தி.மு.க பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.
அதன்படி, தி.மு.க-வில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இளைய அருணா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதியதாக சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக பெரம்பூர் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து, தி.மு.க-வின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக குன்னம் ராஜேந்திரன் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவர் உடல்நலப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வருவதால், அவர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, புதியதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளராக ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.