Advertisment

மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீடு: திமுக- காங்கிரஸ் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஜனவரி 28ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஜனவரி 28ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Advertisment

நாடாளுமன்ற தேர்தலுக்கா அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும்  கூட்டணி  கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள்  தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். திமுக, அதிமுக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக வேகப்படுத்தி நிலையில் வரும் 28ம் தேதி காங்கிரஸ் உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மக்களைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வரும் ஜனவரி 28ம் தேதி  பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜனவரி 28ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment