/indian-express-tamil/media/media_files/wjR8FRPJfloiAsAEamaQ.jpeg)
Vanathi Srinivasan MLA
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் ’விருட்சம்’ திட்டத்தை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏமரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
’பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். தற்போது விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வம் பொறுப்பும் உருவாகும்.
கரியமில வாயு வெளியிடு அதிகமாகி வருகிறது.
இதற்கு சமமாக கார்பன் நியூட்ரல் உருவாக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மரம் நட வேண்டும். மாநகராட்சி இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும், என்று கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், ’திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதாஎன்பதை பார்க்கத்தான் போறோம். மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை, அடிப்படை வசதிகளும் இல்லை.
டெங்கு பொறுத்தவரை, கொசு மருந்து அடித்ததை பார்த்ததே இல்லை, எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது.
அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அடிக்கடி அதிகாரி மாற்றத்தை கைவிட வேண்டும்.
திரைத்துறை, ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது.
அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது.இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம்.ஒட்டுமொத்த திரைத்துறையை கையில் வைத்துள்ளனர்.இதற்கு முன்னர் இப்படி இருந்ததால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.