மதுரை மாநகரட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தி.மு.க பெண் கவுன்சிலர் நூர்ஜகான் என்பவர் கலந்துகொண்டார். அப்போது மண்டலத் தலைவர் தி.மு.க.வைச் சேர்ந்த பாண்டிச் செல்வியிடம், நூர்ஜகான் சில கேள்விகள் கேட்டுள்ளார்.
அப்போது, பாண்டிச் செல்வி கணவர் மிசா பாண்டியன், “நன்றி மட்டும் கூறுங்கள்; கேள்வி கேட்கக் கூடாது” எனப் பேசியுள்ளார்.
இதனை கேட்காமல் நூர்ஜகான், தொடர்ந்து கேள்விகள் கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மிசா பாண்டியன், நூர்ஜகானை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. மேலும், நூர்ஜகான், பி.டி.ஆர். ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. இதனால் மதுரை தி.மு.க.வில் உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு தி.மு.க கவுன்சிலரான நூர்ஜகான் காஜிமார் தெருவை சேர்ந்தவர் ஆவார். இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“