கோவையில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டிற்கு அ.தி.மு.க துரோகம் செய்துள்ளதாகக் கூறி, தி.மு.க ஐ.டி விங் சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
குறிப்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் "வஞ்சக பா.ஜ.க-வுடன் சேர்ந்து அடிமை அ.தி.மு.க தமிழ்நாட்டுக்கு செய்த துரோக பட்டியல்!" என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
அதில், "நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ, மாணவியரின் உயிரைப் பறித்தது, மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான CAA சட்டத்திற்கு ஆதரவு" என குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு, தொகுதி மறு சீரமைப்பு என பா.ஜ.க-வை விமர்சிக்கும் விதமான வாசகங்களும் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தனர். இந்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.