Advertisment

தி.மு.க உட்கட்சி தேர்தல்; செப். 22 ஆம் தேதி முதல் தொடக்கம்

தி.மு.க உட்கட்சி தேர்தல் அறிவிப்பு; செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் வேட்புமனு தொடக்கம்

author-image
WebDesk
Sep 18, 2022 17:31 IST
New Update
DMK

திமுக தலைமையகம்

தி.மு.க உட்கட்சி தேர்தல் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி.மு.க.,வின் 15 உட்கட்சி பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதையும் படியுங்கள்: பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த விவகாரம்: கடைக்கு சீல்.. 2 பேர் கைது

இந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என்றும், வேட்புமனுக்களை முன்மொழிபவர்களும் வழிமொழிபவர்களும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Mk Stalin #Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment