தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : ” கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸூம் தி.மு.கவும்தான். கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன். மக்களை மொழியால், மதத்தால், சாதியால், பிரித்தாளும் வேலையை தி.மு.க செய்கிறது. தி.மு.கவின் செயல்களை மக்கள் உணரும்போது அந்த கட்சி செல்லாக்காசாகிவிடும். தி.மு.க என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது.
தி.மு.கவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக தி.மு.க செயல்படுகிறது. முருகப் பெருமானை நான் வணங்குகிறேன் இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. அம்மா ஜெயலலிதாவை தி.மு.கவினர் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். இந்தியா கூட்டணி கட்சியினர் பெண் சக்திக்கு எதிராக பேசி வருகின்றனர். ஏப்ரல் 19ம் தேதி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் கேரண்டியை உறுதி செய்யும்.
பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதால் தமிழ்நாடு முன்னேறும் என நான் கேரண்டி கொடுக்கிறேன். தி.மு.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள்” என்று கூறினார்