தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி முப்பெரும்விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலை பள்ளி அண்ணாதிடலில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடங்கியது. இந்த விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. திமுக மத்திய, மாநில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.