EWS இடஒதுக்கீடு: ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு கோரி தி.மு.க வழக்கு

ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி குன்னுார் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி குன்னுார் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

author-image
WebDesk
New Update
economically weaker sections, EWS quota, income tax, madras high court, chennai, tamil nadu, EWS இடஒதுக்கீடு, ரூ 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு கோரி மனு, திமுக வழக்கு, income tax exemptions, income tax for EWS, Tamil indian express news

ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி குன்னுார் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைவருக்கும் வருமான வரி விலக்கு அளிக்கக் கோரி, திராவிட தி.முக-வைச் சேர்ந்த குன்னூர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க-வின் சொத்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் குன்னூர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது நிதிச் சட்டம் 2022-ன் ஒரு பகுதியாக உள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஜே. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் மத்திய அரசு, மத்திய சட்டத்துறை, மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

“ரூ. 7,99,999 வரையிலான மொத்த வருமானம் உள்ள குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் இடஒதுக்கீட்டின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான வருமான அளவுகோல்களை அரசு நிர்ணயித்திருக்கும் போது, ​​ரூ. 7,99,999 வரம்பு வரை வருமானம் உள்ள தனிநபர்களிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அதில் பகுத்தறிவோ சமத்துவமோ இல்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு அறிவிப்பின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் வராதவர் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இடஒதுக்கீடு பெற EWS என அடையாளம் காணப்பட வேண்டும். அரசாங்க அறிவிப்பில் வருமானம் என்ன என்பதைக் குறிப்பிட்டது. மேலும், சில நபர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட குறிப்பிட்ட சொத்துக்களை வைத்திருந்தால், EWS பிரிவில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Madras High Court Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: