dmk ganesh pallavaram DMK : சென்னை பம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பல்லாவரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது.
பம்மல் அருகே நாகல்கேணியைச் சேர்ந்தவர் கணேசன்(52). திமுகபிரமுகரான இவரை, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த இருவர், அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில், மருத்துவர்கள் கணேசனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர் (43), சுகுமாரன் (30), திருநீர்மலையை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோரை கைது செய்தனர்
விசாரணையில் காலி நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சித்தபோது கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால் வீனஸின் வலியுறுத்தலின்பேரில் கணேசனை அன்பழகன், சுகுமார் கொலை செய்தது தெரிய வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Dmk ganesh pallavaram dmk functionary ganesh murder dmk ganesh pallavaram murder
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!