தி.மு.க-வின் கூட்டாட்சி கொள்கை: மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்த 3 குழுக்கள்; பரிந்துரைத்தது என்ன?

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்மட்டக் குழுவை அமைத்ததன் மூலம், கூட்டாட்சி பற்றிய கேள்வி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. 

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்மட்டக் குழுவை அமைத்ததன் மூலம், கூட்டாட்சி பற்றிய கேள்வி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK’s

மாநில சுயாட்சி: மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த 3 குழுக்கள் - பரிந்துரைத்தது என்ன?

"இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று அரசியலமைப்பின் பிரிவு 1 கூறுகிறது. இருப்பினும், அரசியலமைப்பு அரசியலை அரை-கூட்டாட்சியாக மாற்றுகிறது. சட்டமன்ற அதிகாரங்கள் யூனியன் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் ஒருங்கமை பட்டியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன, நிர்வாக அதிகாரங்கள் சட்டமன்ற அதிகாரங்களுடன் இணைந்தே உள்ளன. நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

3 பட்டியல்களில் எதிலும் சேராத எந்தவொரு விஷயத்திலும் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் உள்ளன. மேலும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் மாநில சட்டத்துடன் மோதல் ஏற்படும்போது மத்திய சட்டம் மேலோங்கும். நாடாளுமன்றம் எந்த மாநில எல்லைகளையும் மாற்ற முடியும். மேலும், ஆளுநர் பதவி மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மத்திய அரசு அதிகாரத்தையும் மேம்படுத்துகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

நாட்டில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு ஆதரவாக அரசியலமைப்பில் உள்ள குறைபாடு கூட்டாட்சி கவலைகளை முன்னிலை படுத்தி உள்ளன. பல தசாப்தங்களாக மத்திய அரசை ஒருசார்புடையவை என மாநில அரசுகள் குற்றம் சாட்டின. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நீக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரிவு 356-ஐ பயன்படுத்தியபோது, பிரச்னைகள் உருவாகின. மத்திய மற்றும் மாநில அரசு வேற வேற கட்சிகளால் நடத்தப்பட்டபோது, ​​மாநில கட்சிகளின் எழுச்சியுடன் பிரச்னைகள் மேலும் தீவிரமடைந்தன.

Advertisment
Advertisements

மத்திய அரசின் அதிகாரங்களுக்கும், மாநில அரசுகளின் சுயாட்சிக்கும் இடையேயான இந்தப் பதற்றம், ஆணையங்கள் வழங்கிய பரிந்துரைகளால் தீர்க்கப்பட்டுள்ளது.

ராஜமன்னார் குழு:

1969-ல், அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழுவை அமைத்தார். 3 பேர் கொண்ட குழு அரசியலமைப்பை ஆய்வு செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமல் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை பிரிவுகளில் மாநிலத்தின் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. அதன் முடிவுகள் தெளிவாகவும் கடுமையானதாகவும் இருந்தன. 

"மத்திய அரசின் வலுவான ஆதிக்கம் அதிகரிக்கிறது, மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தும் மத்திய அரசின் போக்கு, மாநிலங்களின் சுயாட்சியை கடுமையாக பாதிக்கிறது" என்று தெரிவித்த குழு, அந்நேரத்தில் மத்திய-மாநிலங்கள் 2-ம் ஒரே கட்சியால் நடத்தப்படுவதால் மாநில குறிப்பிட்ட விஷயங்கள் எவ்வாறு மத்திய கட்டுப்பாட்டின் கீழ் அதிகரித்தன என்று கூறியது.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசை அனுமதிக்கும் 356-வது பிரிவை ரத்து செய்யவும், வேறுபாடுகளைத் தீர்க்க 263 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான வலுவான கவுன்சிலை அமைக்கவும் குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியலமைப்பிற்கு வெளியே தோன்றிய நிறுவனங்களை குழு விமர்சித்தது. அவற்றில் முக்கியமானது மத்திய அரசின் நிர்வாக உத்தரவால் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷன். மத்திய அரசின் கையில் சாட்டை இருக்கிறது. ஏனெனில், மத்திய அரசு தனது விருப்பப்படி மானியங்கள் வழங்குகின்றன. திட்ட ஒதுக்கீடு முற்றிலும் திட்டக்குழு உறுப்பினர்களால் முடிவெடுக்கப்படுகிறது என்று குழு கூறியது.

இதனால், அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றுள்ள நிதிக்குழு தேவையற்றதாக உள்ளது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், மாநில அரசுகளை அவற்றின் சொந்த அதிகார வரம்புகளிலேயே உதவிக்கு விண்ணப்பிக்கும் நாடுகளாக மாற்றிவிட்டது. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போதுள்ள அரசிதழ் சேவைகளின் உறுப்பினர்களை மாற்றுவதன் மூலம் (அ) நேரடி ஆட்சேர்ப்பு மூலம் இருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

ஆளுநரைப் பொறுத்தவரை, ஆளுநர்களுக்கு "அறிவுறுத்தல் ஆவணங்களை" குடியரசுத் தலைவர் வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் வகையில் அரசியலமைப்பில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட வேண்டும் என்று அது கூறியது. ஆளுநர் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயங்கள், மத்திய அரசு அவருக்கு எங்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை இவை வகுக்கும்.

சர்க்காரியா கமிஷன்:

சர்க்காரியா கமிஷன் 1983-ல் மத்திய-மாநில உறவுகளின் பரிணாமத்தை மறு ஆய்வு செய்யவும், தொடர் பிரச்னைகளை அடையாளம் காணவும், தீர்வுகளைத் தேடவும் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1960களில் இருந்து மாநில கட்சிகளின் எழுச்சியை அடுத்து இத்தகைய ஆணையத்தின் தேவை உணரப்பட்டது. அவை காங்கிரஸ் ஆளும் மத்திய அரசுடன் அடிக்கடி மோதின. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சி என்ற தகுதியை காங்கிரஸ் இழந்து விட்டது.

சர்க்காரியா கமிஷன் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை பரிந்துரைத்தது. பிரிவு-356 இன் தன்னிச்சையான பயன்பாட்டை விமர்சித்தது. அதிகாரப்பரவலை ஆதரித்தது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அரசியலற்ற நபர்களை ஆளுநர்களாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், கூட்டாட்சி பதட்டங்களைத் தீர்க்க மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை செயல்படுத்த அழைப்பு விடுத்தது.

புஞ்சி கமிஷன்:

2007-ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவுகளின் புதிய பிரச்னைகளை ஆராய புஞ்சி ஆணையத்தை அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது.

இது கூட்டாட்சி பிரச்னைகளை ஆராய்ந்தது. மாநிலத்தில் சாதி (அ) வகுப்புவாத வன்முறை வழக்குகளில் மத்திய சக்திகளின் பங்கு. அரசியல் ரீதியாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அங்கு "சாத்தியமான" வன்முறைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பதிலும் இதுதான். வகுப்புவாத வன்முறைச் சூழலில், முன் அனுமதியின்றி மாநிலங்களில் மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. நிதி அமைச்சகத்தின் நிதி ஆணைக்குழு பிரிவை தரமுயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது.

ஆளுநர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் தனிநபர்களாக இருக்க வேண்டும் என்றும், அரசியலில் ஆழமான ஈடுபாடு இருக்கக்கூடாது என்றும் புஞ்சி குழு பரிந்துரைத்தது. ஒரு ஆளுநரின் நிலையான பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் என்றும், நீக்குவது மத்திய அரசின் விருப்பப்படி இல்லாமல் நீக்குவதற்கான செயல்முறை என்றும் அது கோரியது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா (அ) குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைப்பதா என்று ஆளுநர் முடிவு செய்ய அதிகபட்சம் 6 மாத காலத்தை பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் தனது பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதா மீதான முடிவை 6 மாதங்களுக்குள் மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் அதிகாரத்தை மேம்படுத்த பிரிவு 263-ஐ திருத்தப்பட வேண்டும் என்று புஞ்சி கமிஷன் பரிந்துரைத்தது.

சமீபத்திய நிகழ்வுகளில் இந்த கவலைகளில் சில மீண்டும் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த மாதம் உச்சநீதிமன்றம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் நீண்டகால தாமதம் சட்டத்தில் தவறானது என்று தீர்ப்பளித்தது.

Cm Mk Stalin Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: