Advertisment

411 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிய மோடி: தி.மு.க கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி தாக்கு

விலைக்கு வாங்கப்பட்டவர்களை வைத்து மோடி ஆட்சி நடத்த விரும்புகிறார். இது நிலைக்காது- ஆர்.எஸ்.பாரதி பேச்சு

author-image
WebDesk
New Update
RS Bharati said that DMK is not afraid of IT raids
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00



தி.மு.க தனது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று (பிப்.16) தொடங்கியது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அமைச்சர்கள், எல்.எல்.ஏக்கள் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினர்.

Advertisment

விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.பாரதி உள்பட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "பாரதி  ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர். தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன? வளர்ச்சி என்ன இருக்கிறது என்று பேசுவதற்கு பா.ஜ.க-வில் யாருக்கும் தைரியம் இல்லை. அண்ணாமலை பொய் பேசுவதற்காகவே அண்ணாமலை இருக்கிறார்.

அவர் ஒரு நாளைக்கு 100 பொய்யையாவது சொல்வார், பொய் சொல்லாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். இந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்கள் யாரையாவது வாழ வைத்திருக்கிறாரா? அவர். 

10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏக்களை மோடி விலைக்கு வாங்கியுள்ளார்.  விலைக்கு வாங்கப்பட்டவர்களை வைத்து ஆட்சி நடத்த விரும்புகிறார். இது நீண்ட நாட்கள் நிலைக்காது. பிரதமர் மோடியின் பிரசாரம் இந்த தேர்தலில் எடுபடாது. பா.ஜ.க தோற்பது உறுதி. இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment