/indian-express-tamil/media/media_files/NRQVKjYsucvPSyoPJ2PR.jpg)
கோவை, நெல்லை தி.மு.க மேயர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
கோவை, நெல்லை தி.மு.க. மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததால் மேயர் பதவியை தொடர முடியாமல் ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆணையரும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட திமுக மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே மற்ற திமுக கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை கூறிவந்தனர்.
இந்த நிலையில் சரவணன் ராஜினாமா செய்துள்ளார். சரவணனின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.