Advertisment

பிரியாணி டூ பார்லர்! பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி சஸ்பெண்ட்!

பெரம்பலூரில் பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் சஸ்பென்ட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரியாணி டூ பார்லர்! பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி சஸ்பெண்ட்!

பெரம்பலூரில் பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Advertisment

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், செல்வகுமார் சத்யாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கேட்டு, கடைக்காரர்களை  திமுக உறுப்பினர் யுவராஜ் தாக்கியது அகில இந்திய அளவில் டிரெண்டானது. இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment