Advertisment

அமைச்சர் ஐ. பெரியசாமி ஊழல் வழக்கில் நெருக்கடி: மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் விசாரணை

வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரம்; ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தொடங்கும் உச்சநீதிமன்றம்

author-image
WebDesk
New Update
 i periyasamy

வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரம்; ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தொடங்கும் உச்சநீதிமன்றம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Advertisment

கடந்த 2006 – 2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி. இவர் 2008 ஆம் ஆண்டு முறைகேடாக வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஒதுக்கியதாக 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு குற்றம் சாட்டியது. மேலும், ஐ.பெரியசாமி மீது 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. இதனிடையே தி.மு.க 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

எனினும், இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. அதேநேரம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார். மேலும், இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும், ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு நாள்தோறும் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில் குறிப்பிட்டார். 

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் எனவும், விசாரணையை தள்ளி வைக்கவும் ஐ.பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஐ.பெரியசாமி கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 8) நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்க ஐ.பெரியசாமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

I Periyasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment