தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு சில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்பட்டது . மேலும் தன்னை தனிமைப்படுத்துகொண்டாதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் நேற்று அவர் மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து முதலமைச்சருக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாக காவிரி மருத்துவமனை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
இந்நிலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு. நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “ இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.