சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க அமைச்சர் விடுவிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Advertisment

கடந்த திமுக ஆட்சி காலத்தில் அதாவது 2006 முதல் 2011 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்தான் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  2012ம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கானது இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: