/tamil-ie/media/media_files/uploads/2020/11/poongothai-dmk-mla.jpg)
திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெல்லை ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்ந்துகொண்ட எம்.எல்.ஏ பூங்கோதையை கட்சியினர் சிலர் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ பூங்கோதை இன்று தீடீரென சுய நினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ பூங்கோதையின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ சுயநினைவு இல்லாத நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் விழித்துக்கொண்டிருக்கிறார். பதிலளிக்கிறார். அவருடைய உடல்நிலை திருப்திகரமாக உள்ளது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருடைய உடல்நிலை உறுதியாக உள்ளது. அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றானர்.” என்று அறிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.