New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/sakkarapani.jpg)
sakkarapani, சக்கரபாணி
ரயிலில் சென்ற திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி கொண்டு வந்த நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி நகை பணம் கொள்ளை
மதுரையில் இருந்து பாண்டியன் ரயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி, ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். தூக்கம் கலைந்து எழுந்த போது, அவர் வைத்திருந்த பணப்பை காணாமல் போனது தெரியவந்தது.
அருகில் தேடி பார்த்தும் கிடைக்காததால், எம்.எல்.ஏ சக்கரபாணி ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.