/indian-express-tamil/media/media_files/MoEB8fxJiiXVV9chCwHk.jpeg)
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன். இவரின் மனைவி மெர்லினா. இவர்கள் திருவான்மையூரில் வசித்து வந்தனர்.
இவர்களின் வீட்டில் பணி பெண்ணாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி செய்து வந்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆபாசமாக பேசுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் துணியில் சிறிய கரை இருந்தாலும் பணிப்பெண்ணை தாக்கியுள்ளனர்; பச்சை மிளகாயை கடிக்கச் சொல்லி துன்புறுத்தி உள்ளனர்.
தனது தாயைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். படுக்க வைத்து பிறப்புறுப்பில் மிதித்துள்ளனர். மேலும் ஜாதி பெயரை கூறி அப்பெண்ணை தாக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கை ரிப்போர்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எம் எல் ஏ வின் மகனும் மருமகளும் மாயமாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.