மார்ச் 15ல் கூடும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என அறிவிப்பு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மார்ச் 15ல் கூடும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் மார்ச் 15-ம் தேதி தொடங்கும் எனவும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மார்ச் 15-ம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் 15-ம் தேதி தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும், காவிரி விவகாரம் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

Dmk Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: