Advertisment

பட்டியலின மக்கள், சிறுபான்மையினரை ஒடுக்கப் பார்க்கிறது பா.ஜ.க - மக்களவையில் ஆ.ராசா பேச்சு

மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய, தி.மு.க எம்.பி. ஆ. ராசா, பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்று பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A Raja x

மக்களவையில் ஆ.ராசா பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

18-வது மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா திங்கள்கிழமை பேசினார். 

Advertisment

அப்போது தி.மு.க எம்.பி ஆ. ராசா பேசியதாவது: “மத்திய அரசு பாசிச கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை மத்திய அரசு குறிவைக்கிறது. இது தான் பாசிசம்; இது தான் இனவாதம். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது.

பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாக உள்ளது. பா.ஜ.க. அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி 8 முறை பரப்புரைக்கு வந்தும், திராவிட மண்ணில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன்பிறகு மக்கள் அவரை மீண்டும் பிரதமராக்கினார்கள்.

மோடியைக்கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால், அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான், அவரை அப்படி நம்ப முடியவில்லை” என்று  ஆ. ராசா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment