Advertisment

ராமேஸ்வரம் மீனவர்களை டெல்லி அழைத்துச் செல்லும் தி.மு.க: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க கடிதம்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு கடிதம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TR Baalu Jaishankar

ராமேஸ்வரம் மீனவர்களை டெல்லி அழைத்துச் செல்லும் தி.மு.க: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க கடிதம்

இந்திய கடல் எல்லையில் அக்டோபர் 28-ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு புதன்கிழமை கடிதம் அளித்துள்ளார்.

Advertisment

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தமிழக மீன்வளத்துறை தெரிவித்தது. மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தது.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு புதன்கிழமை கடிதம் அளித்துள்ளார்.

தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அக்டோபர் 30-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடுக்கடலில் இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, எனக்கும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் உறவினர்களுக்கும் அக்டோபர் 31-ம் தேதி உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 என்று கூறியுளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள தனி கடிதத்தில், 37 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பாக சந்திக்க தயவு செய்து எங்களுக்கு  நேரம் ஒதுக்கித் தந்து எங்களை சந்திக்க வேண்டும் என தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடி படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் அக்டோபர் 28-ம் தேதி கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் 5 மீன்பிடி படகுகள் அவர்களின் மீன்பிடி படகுகள் பதிவு எண்கள் கொண்ட IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN -10-MM-972 5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment