/indian-express-tamil/media/media_files/2024/12/07/zraMpVKC3efuH2teIvEp.jpg)
கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில், முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது திமுக எம்.பி கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் முப்பெரும் விழா, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கழகத்தின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்குவார்.
பெரியார் விருது: கழகத்தின் பொருளாளர் மற்றும் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது. கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அண்ணா விருது: தணிக்கைக்குழு உறுப்பினர் மற்றும் சென்னை மாநகர முன்னாள் துணை மேயருமான சுப. சீத்தாராமன் அவர்களுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது.
கலைஞர் விருது: கழகத்தின் நூற்றாண்டு கண்ட மூத்த முன்னோடியும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அறிஞர் அண்ணா சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான சோ.மா. ராமச்சந்திரன் அவர்கள் கலைஞர் விருதைப் பெறுகிறார்.
பாவேந்தர் விருது: கழகத்தின் மூத்த முன்னோடியும், தலைமையின் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன் அவர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
பேராசிரியர் விருது: கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழுவின் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான மதுரர் இராமலிங்கம் அவர்கள் பேராசிரியர் விருதைப் பெறுகிறார்.
மு.க.ஸ்டாலின் விருது: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.