Advertisment

ஆர்.என். ரவி இன்னொரு அண்ணாமலை: தி.மு.க கடும் விமர்சனம்

கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ-விடம் ஏன் தாமதமாக ஒப்படைத்தது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் ஏன் தாமதம் செய்தனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பிய நிலையில், ஆளும் தி.மு.க-வின் முரசொலி நாளேடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்னொரு அண்ணாமலை ஆக வேண்டாம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஆர்.என். ரவி இன்னொரு அண்ணாமலை: தி.மு.க கடும் விமர்சனம்

கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ-விடம் ஏன் தாமதமாக ஒப்படைத்தது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் ஏன் தாமதம் செய்தனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பிய நிலையில், ஆளும் தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, ஆள்நர் ஆர்.என். ரவி இன்னொரு அண்ணாமலை ஆக வேண்டாம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Advertisment

கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சி கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு வழக்கை தமிக காவல்துறை சிறப்பாகக் கையாண்டது. ஆனால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஏன் தாமதமாக ஒப்படைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், முடிவெடுக்க வேண்டியவர்கள் தாமதம் செய்தது ஏன் என்று ஆர்.என். ரவி கேள்வி எழுப்பினார்.

அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: “தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். கோவை இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பெயர்போன இடமாக மாறிவருகிறது. தற்போது நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

இதை நாம் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. நம் தேசத்தின் சிறப்பான காவல்துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று.

ஆனால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் கேள்வி. தீவிரவாதத் தாக்குதல்களை பொறுத்தவரை சம்பவம் நடந்த அடுத்தடுத்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், நாம் நான்கு நாள்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைக்கு கொடுத்திருக்கிறோம்.

இது போன்ற வாய்ப்புகளை தீவிரவாதிகளுக்கு வழங்கக் கூடாது. இந்திய நாட்டுக்காக தீவிரவாதத்தின் மீது மென்மையான பார்வை வேண்டாம். தமிழக காவல்துறை சிறப்பாக நடவடிக்கை எடுத்தது. அதனால் நேரடியாக தேசிய பாதுகாப்பு முகமையைத் தொடர்புகொள்ள முடியாது. ஆனால் முடிவெடுக்கவேண்டியவர்கள் ஏன் தாமதம் செய்தனர்?

நான் முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, தமிழக காவல்துறை, பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஒரு தீவிரவாத அமைப்பு என எனக்குத் தகவல் அளித்தது. அந்த வகையில் தமிழக காவல்துறையினர் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள் என எனக்குத் தெரியும்” என்று பேசினார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டு கடுமையாக விமசர்னம் செய்துள்ளது.

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர்.என். ரவி சொல்லி இருக்கிறார். ‘கோவை வழக்கை என்.ஐ.ஏவுக்கு வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி’ என்று பொத்தாம் பொதுவாக பேசியிருக்கிறார்.

ஆளுநர் பொறுப்பில் இருப்பவருக்கு முதலில் எங்கே எதைப் பேச வேண்டும் என்ற புரிதல் முதலில் இருக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனம், தனது யோகா மற்று இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக, இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி கேட்டுள்ளார். ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசிடம் கேள்வி எழுப்பும் முறை இதுதானா? அதுவும் கோவை போன்ற விவகாரத்தில் இப்படி கேட்கலாமா? அதுவும் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். இப்படிக் கேட்பதுதான் இவரது பணிக்காலத்தில் பயன்படுத்திய முறையா?

“இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டது. நான் துனை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்று எனக்கு தமிழகக் காவல்துறைதான் தகவல் அளித்தது. அந்த வகையீல் நாட்டில் உள்ள காவல்துறைகளில் தமிழகக் காவல்துறை சிறப்பாகச் செயல்படக் கூடியது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்த வழக்கை என்.ஐ.எ.வுக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் என் கேள்வி” என்று பேசி இருக்கிறார்.

“தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது…” என்று சொல்லிவிட்டு, ‘ஆனால்’ போட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டதா? ஒரு மாதம் ஆகிவிட்டதா? ஒரு வாரம் ஆகிவிட்டதா? மூன்றாவது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கை மாற்ற்விட்டார் முதலமைச்சர். இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? அக்டோபர் 23 அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 அன்று காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதில் எந்த தாமதமும் இல்லை.

  1. Delhi court complex வெடிவிபத்து நடந்த நாள் 23.12.2021

    என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 13.1.2022
  2. Bomb explosion at ps Khejuri WB வெடிவிபத்து நடந்த நாள் 4.1.2022

    என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 27.1.2022
  3. Bomb explosion at naihati wB வெடிவிபத்து நடந்த நாள் 27.1.2022

    என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 8.2.2022
  4. Low intensity blast in police bazar of Shillong city வெடி விபத்து நடந்த நாள் 30.1.2022

    என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 4.3.2022
  5. Loud explosion at an automobile work shop durtlang வெடிவிபத்து நடந்த நாள் 18.03.2022

    என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 20.7.2022

இந்த வகையில், பார்த்தல் மூன்று, நான்கு மதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால், இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு. தில் என்ன குறை கண்டார் ஆளுநர்?

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து காருக்குள் இருந்தவர் மரணம் அடைகிறார். உடனடியாக அந்த இடத்தில் இருந்த அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டது. அப்போதே, உடனடியாக டி.ஜி.பி சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி தாமரைக் கண்ணன், உளவுத்துறை தலைவர் டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட அனைவரும் கோவைக்கு வந்துவிட்டார்கள். அன்றைய தினமே, அந்த கார் யாருடையது என கண்டறியப்பட்டது. அன்றைய தினமே அநெத நபர் யாரென கண்டறியப்பட்டார். அன்றைய தினமே அந்த நபரின் வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டது. ஆறு தனிப்படைகள் இதற்காக உடனடியாக அமர்த்தப்பட்டது. அண்த மாவட்டமே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. எவரும் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டார்கள். மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டது. அருகில் இருந்த மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டார்கள் காவல் அதிகாரிகள்.

சுற்றிலும் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை வைத்து அந்த நபரோடு தொடர்பில் இருந்த அனைவரும் மறுநாள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இதில் நேரடி தொடர்புடைய ஐந்து பேர் உடனடியாக மறுநாள் கைது செய்யப்பட்டார்கள்.

மாநில முழுவதும் இதுபோன்ற அடிப்படைவாத தீவிரவாதிகளை கண்காணிக்க காவல்துறை உத்தரவிட்டது. இதுபோன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் நினைப்பது போல யாரும் அலட்சியமாக இருக்கவில்லை.

எந்தப் பெரிய சம்பவம் நடந்தாலும் உள்ளூர் போலீஸ் வழக்கு பதியும். அது பயங்கரவாத நிகழ்வாக இருந்து, வெளிமாநிலம் வெளிநாடு அளவில் விசாரிக்க வேண்டியதாக இருந்தால் மாநில அரசுக்கு இது தொடர்பான கோரிக்கையையும் உள்ளூர் போலீஸ்தான் அனுப்பி வைக்க வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டம், தேசிய புலனாய்வு முகமைச் சட்டப்பிரிவு ஆகியவை சேர்க்கப்பட வேண்டிய வழக்காக இருந்தால் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். அதுதான் இதில் நடந்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?

தமிழ்நடு காவல்துறை போட்ட அதே முதல் தகவல் அறிக்கையைத்தான், என்.ஐ.ஏ.வும் போட்டுள்ளது. எனவே, எந்த தடயமும் அழிக்கப்பட்டதாகக் கண்டுபிடிக்கப் படவில்லை.

குறை சொல்வதாக இருந்தால், நாமும் அதிகமாகக் கேட்போம். இப்போது இறந்து போன நபரை 2019 ஆம் ஆண்டு விசாரித்தது இதே முகமை தானே. அப்போது இருந்தது அ.தி.மு.க ஆட்சி அவரை அந்த ஆட்சியோ, என்.ஐ.ஏ.வோ தொடர்ந்து கண்காணித்ததா?

2008 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் ஆகும். இதில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். ஆனால், 2019 ஆம் ஆண்டுதான் திருத்தம் செய்தார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் திருத்தம் கொண்டுவர மனம் வந்ததா? ஏன் இந்தக் காலதாமதாம் என்று நாமும் கேட்கலாமே?

பலரையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்திருக்கிறார்கள். தில் 2019 இல் விசாரிக்கப்பட்ட இந்த நபர் ஏன் இல்லை? இப்படி கேட்டுக்கொண்டே போகலா.

பா.ஜ.க ஆட்சியில் தேசிய புலனாய்வு முகமைச் சட்டத்துக்கு திருத்தம் வந்தபோது, தி.மு.க ஆதரித்து வாக்களித்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் உறுதியாக இருப்பது தி.மு.க் கழகமும் அதன் ஆட்சியும். அதன் மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் பொறுப்பற்றுப் பேசக் கூடாது.

அவர் இன்னொரு ‘அண்ணாமலை’யாக ஆக வேண்டாம் தமிழக பா.ஜ.க தாங்காது.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Governor Rn Ravi Murasoli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment