Advertisment

ஆளுனரின் செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை: தி.மு.க தாக்கு

ஆளுநருக்கு தைரியம் இருந்தால், அரசியலுக்கு வந்து மோதட்டும் என்று திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆர்.ரன்.ரவி

ஆர்.ரன்.ரவி

ஆளுநருக்கு தைரியம் இருந்தால், அரசியலுக்கு வந்து மோதட்டும் என்று திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Advertisment

”ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்.  அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. அவரது முகவரியை கமலாலயத்திற்கு மாற்றிக்கொண்டு, முழுமையாக அரசியல் போருக்கு வரட்டும்”  என்று திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஒரு நியாயமான பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும், அவர் செய்துகொண்டு வரும் இடையூறுகள் சகித்துக்கொள்ள முடியாதவையாக இருகின்றது. அவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆர்.என்.ரவி அதே நேரத்தில் மற்ற மாநிலத்தின் விழாக்களை இங்கே உட்கார்ந்து  கொண்டு கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநிலம் உருவான தினம், மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினம், மிசோரம் மாநிலம் இருவான தினம், கோவா மாநிலம் உருவான தினம், தெலுங்கானா மாநிலம் உருவாக தினம் என்று மற்ற மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடிக் கொண்டு  இருக்கிறார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment