டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK files Complaint against Tamil Nadu Speaker Dhanapal

DMK files Complaint against Tamil Nadu Speaker Dhanapal

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர், அவர்களது தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

Advertisment

மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன.

இதற்கிடையே, அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கடந்த ஓராண்டாக டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக இவர்கள் 3 பேரும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனால் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சபாநாயகர் தனபாலை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

Advertisment
Advertisements

இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், “அ.தி.மு.க. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொறடா சமர்பித்துள்ளார். இதுகுறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறப்பட்டு இருந்தது. 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த கடிதத்தை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி இன்று மனு அளித்திருக்கிறார். ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dmk Speaker Dhanapal Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: