சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்கு தலா 2 சீட்: அதிகாரபூர்வமாக அறிவித்த தி.மு.க

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
anna arivalayam

மக்களவைத் தேர்தலில் சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிப்ரவரி 24-ம் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

இதில் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது என்று தி.மு.க அறிவித்தது.

Advertisment
Advertisements

இதையடுத்து, தி.மு.க. கூட்டணி கட்சியான சி.பி.எம்,  மற்றும் சி.பி.ஐ கட்சிகளுடன் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சி.பி.எம் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவினர் கூடுதல் தொகுதிகள் கேட்பதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சிகளுடன் தி.மு.க-வின் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு வியாழக்கிழமை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இண்டியா கூட்டணியில் சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது. மேலும், சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Lok Sabha Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: